சென்னை, முகப்பேரில் உள்ள எம். எம். எம். (MADRAS MEDIAL
MISSION) மருத்துவமனையில் எனது இளைய மகன்
கவின்- ஜார்ஜ்க்கு 13,06.2011 அன்று இதய அறுவை
நல்லபடியாக நடந்தது.
பிறக்கும்போதே, இதயத்தில் ஒரு சிறிய ஓட்டை (5 mm )
இருந்தது. இது தானாய் அடைபட்டு விடும் என்று ஐந்து
வருடம் காத்து இருந்தோம். முடிவில், அறுவை சிகிச்சைதான்
தீர்வு என்றார்கள்.
" இரக்கம் உள்ள இறைவன் ஏன் இதயத்தில் ஓட்டை போட்டார் "
என்று பல நாட்கள் நினைத்து இருக்கிறேன். இறைவனிடம்
வேண்டி இருக்கிறேன்.
மருத்துவமனியில் இருந்த நாட்கள் முள்மீது படுத்திருந்த
நாட்கள்தான். சோகமான மனிதர்கள், ஏக்கமான மனிதர்கள்,
ஏழ்மையான மனிதர்கள், இவர்களைச் சந்தித்தில் பெற்ற
அனுபவங்கள் மூன்று பட்டங்களுக்குச் சமம்,.
அங்குள்ள டாக்டர்கள், நர்சுகள், சிஸ்டர்கள் இவர்களின்
கனிவான சேவைகளை நேரில் பார்த்தேன். நேகிழ்ந்தேன்.
அங்கு அறிமுகமான முஸ்லிம் நண்பர் என்னிடம் சொன்னார்,
" அண்ணே ! இவர்கள் இறந்த உடன் நேரடியாக மோட்சத்துக்கு
போவார்கள் " என்றார்.
இவர்களின் கனிவான சேவைக்கு இந்த ஒரு வார்த்தை ஒரு
உதாரணம்.
கவினுக்கு ரத்தம் எடுத்து டெஸ்ட் செய்தாக வேண்டும்.
நரம்பில் ஊசி போடுகிறார்கள். சரியாக நரம்பு பிடிபடவில்லை.
அழுகிறான், துடிக்கிறான்.
" ஊசி குத்தினா வலிக்கும் ! உங்களுக்கு என்ன தெரியும் ?! "
என்றான் குழந்தை குழந்தைத்தனமாக.....
உடனே பக்கத்தில் இருந்த வார்டுபாய் நர்சிடம், " சிஸ்டர்
என்னுடைய ரத்தத்தை கொஞ்சம் எடுங்க" என்றான். ஊசியால்
குத்தி கொஞ்சம் ரத்தம் எடுத்தார்கள். அப்போது வார்டுபாய்
சொன்னான், " எனக்கு வலிக்கவே இல்லை. நீயும் கையை
நீட்டு, வலிக்காமல் ரத்தம் எடுக்கிறோம் " என்றான். அப்போது
அழாமல் கையை நீட்டினான்.
அந்த இளைஞனின் பரந்த மனதை எப்படி பாராட்டுவது என்றே
தெரியவில்லை.
அறுவை சிகிச்சை செய்த அன்று ரத்த தானம் செய்த நண்பர்களை
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். கலைஞர் காப்பீடு திட்டம்
எனக்கு கிடைக்க உடுனுக்குடன் உதவிய நண்பர்களையும்,
அழுவலர்களையும் எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
இவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்
அருட்தந்தை பீட்டர் ஜெரால்ட், திரு பாண்டிச் செல்வம்,
திரு மதார், ஆரோக்ய நாதர் ஆலய நண்பர்கள்,
அலுவலக நண்பர்கள் மற்றும், உறவினர்கள்
இவர்கள் அனைவரும் எங்கள் மீது காட்டிய அன்பும்,
ஆதரவும் என்றும் மறக்க முடியாதவை.
அந்த மருத்துவமனையில் ஆண்டிற்கு சுமார் 200 ஏழை
( இருதயம் பாதிக்கப்பட்ட ) குழந்தைகளுக்கு முற்றிலும்
இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.
இதற்கு ஆகும் மொத்த செலவையும் மலையாள மனோரமா
பத்திரிகை ஏற்றுக் கொள்கிறது.
அங்கு சென்றபோதுதான் இதை அறிந்தேன். மலையாள
மனோரமாவின் மனித நேயத்திற்கு மரியாதையான
வணக்கங்கள் !
இப்போதெல்லாம் நான் அடிக்கடி இப்படி நினைப்பேன்...
"இறைவன் நம்மைச் சுற்றி இரக்கம் நிறைந்த சில
மனிதர்களை
நமக்காக படைத்து இருக்கிறார்? என்று. ! I
Friday, July 15, 2011
Sunday, May 1, 2011
வியர்வையின் வாசம்
சென்னை- மெரினா கடற்கரையில் உள்ள சிலைகளில்
மிகவும் மதிப்பு வாய்ந்தது உழைப்பாளர் சிலை.
எப்போது போனாலும் அந்தச் சிலையை சில நிமிடங்கள்
உற்றுப் பார்ப்பேன். நரம்புகள் புடைக்க வேலை செய்யும்
உடல் உழைப்பாளர்களின் உடல்கள் ஆயிரம் அர்த்தங்களைச்
சொல்லும்.
திட்டமிட்டு உழைப்பவர்கள் முன்னேறிச் சென்று கொண்டே
இருக்கிறார்கள். பசிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள்
ஓடிய இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.
"ஒரு சான் உயிரை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம். " கவிஞர் வாலி அவர்களின்
பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது,
எழுபது வயது நிரம்பிய முதியவர்கள்கூட கடுமையாக
உழைப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் மிகவும் சொற்ப
வருமானத்திற்காக போராடுகிறார்கள்,.
உழைப்பு மட்டுமே அவர்களுக்கு கை கொடுக்கிறது.
கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதில்
ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.
உயர்வையும், வளர்ச்சியையும் இயற்கையிடம் ஒப்படைத்து விட்டு
உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டு, சிலை வடிவில் உழைக்கும்
உழைப்பாளர்கள் நமக்கெல்லாம் நம்பிக்கை தந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்.
ஆம், மயக்கும் மல்லிகையைவிட உழைப்பளர்களின் வியர்வைக்கு
வாசனை அதிகம்.
=====
மிகவும் மதிப்பு வாய்ந்தது உழைப்பாளர் சிலை.
எப்போது போனாலும் அந்தச் சிலையை சில நிமிடங்கள்
உற்றுப் பார்ப்பேன். நரம்புகள் புடைக்க வேலை செய்யும்
உடல் உழைப்பாளர்களின் உடல்கள் ஆயிரம் அர்த்தங்களைச்
சொல்லும்.
திட்டமிட்டு உழைப்பவர்கள் முன்னேறிச் சென்று கொண்டே
இருக்கிறார்கள். பசிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள்
ஓடிய இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.
"ஒரு சான் உயிரை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம். " கவிஞர் வாலி அவர்களின்
பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது,
எழுபது வயது நிரம்பிய முதியவர்கள்கூட கடுமையாக
உழைப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் மிகவும் சொற்ப
வருமானத்திற்காக போராடுகிறார்கள்,.
உழைப்பு மட்டுமே அவர்களுக்கு கை கொடுக்கிறது.
கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதில்
ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.
உயர்வையும், வளர்ச்சியையும் இயற்கையிடம் ஒப்படைத்து விட்டு
உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டு, சிலை வடிவில் உழைக்கும்
உழைப்பாளர்கள் நமக்கெல்லாம் நம்பிக்கை தந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்.
ஆம், மயக்கும் மல்லிகையைவிட உழைப்பளர்களின் வியர்வைக்கு
வாசனை அதிகம்.
=====
Thursday, March 17, 2011
வாணியின் குரல்
வசீகர குரலுக்குச் சொந்தக்காரன் திருமதி வாணி ஜெயராம்.
மென்மை, இனிமை, வசீகரம், கொஞ்சம் கம்பீரம்
இவை அனைத்தும் சேர்ந்த கலவை அவரது கீதம்.
சிலரின் பாடலைக் கேட்க்கும்போது மனதை வருடும்.
சிலரின் பாடல் மனதுக்குள் ஊடுருவும்.
வாணியின் பாடல் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது.
சங்கர் கணேஷின் இசையில்தான் அதிகமாக
பாடி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
" மேகமே... மேகமே... பால் நிலா தேயுதே.. ! "
இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் என் மனம்
மழை மேகமாகவே மாறும்.
வாணியின் லட்சக்கணக்கான ரசிகர்களின் நானும்
ஒருவன் என்பதில் எனக்கு பெருமிதம்தான் !
++
மென்மை, இனிமை, வசீகரம், கொஞ்சம் கம்பீரம்
இவை அனைத்தும் சேர்ந்த கலவை அவரது கீதம்.
சிலரின் பாடலைக் கேட்க்கும்போது மனதை வருடும்.
சிலரின் பாடல் மனதுக்குள் ஊடுருவும்.
வாணியின் பாடல் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தது.
சங்கர் கணேஷின் இசையில்தான் அதிகமாக
பாடி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
" மேகமே... மேகமே... பால் நிலா தேயுதே.. ! "
இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் என் மனம்
மழை மேகமாகவே மாறும்.
வாணியின் லட்சக்கணக்கான ரசிகர்களின் நானும்
ஒருவன் என்பதில் எனக்கு பெருமிதம்தான் !
++
Wednesday, January 19, 2011
Friday, January 7, 2011
மழலை இன்பம்
மகனே ... நீ..
துள்ளிக் குதித்து
குதுகுலமாய் பள்ளிக்குப்
போகும்போது - என் மனசு
பட்டாம் பூச்சியாயாக மாறுகிறது !
உன் பிஞ்சுக் கைகளை
அசைத்து டாட்ட பை பை
சொல்லும்போது - உனக்காக
பீஸ் கட்டிய சுமைகூட
மறைந்து போகிறது
துள்ளிக் குதித்து
குதுகுலமாய் பள்ளிக்குப்
போகும்போது - என் மனசு
பட்டாம் பூச்சியாயாக மாறுகிறது !
உன் பிஞ்சுக் கைகளை
அசைத்து டாட்ட பை பை
சொல்லும்போது - உனக்காக
பீஸ் கட்டிய சுமைகூட
மறைந்து போகிறது
Tuesday, January 4, 2011
Wednesday, December 1, 2010
சாவி பொம்மை
சாவிக் கொடுத்து ஓடி நின்ற
பொம்மையாய்
அலுவல் முடிந்து வீட்டிற்குள்
நுழைகையில்
கட்டி அணைக்க வருகிறான்
அன்பு மகன்.
அழுக்காய், வியர்த்துப்போய்
இருக்கிறேன்;
குளித்து விட்டு வருகிறேன்
என்றேன்;
அணைத்தக் கைகளை
விலக்கிய படி.
சற்று நேரத்திற்குள்...
குனிந்தத் தலை நிமிராமல்
வீட்டுப் பாடத்திற்குள்
மூழ்கி விட்டான்;
அவனின் ஆசிரியர்
அவனுக்குக் கொடுத்த
சாவியின் படி !
ஆம் !
யாரோ கொடுக்கும் சாவிக்கு
யாருக்காகவோ இயங்கிக்
கொண்டிருக்கிறோம்...
எந்திர மனிதனாய்,
பொம்மையாய் !
ஆற்றல்மிக்க இறைவா !
சாவி மனிதர்களை உமது
ஆவிக்குரிய மனிதர்களாய்
மாற்றும் !
எம்மை உமது கருவியாகப்
பயன்படுத்தும் !
எஸ். எஸ். ஜெயமோகன்
பொம்மையாய்
அலுவல் முடிந்து வீட்டிற்குள்
நுழைகையில்
கட்டி அணைக்க வருகிறான்
அன்பு மகன்.
அழுக்காய், வியர்த்துப்போய்
இருக்கிறேன்;
குளித்து விட்டு வருகிறேன்
என்றேன்;
அணைத்தக் கைகளை
விலக்கிய படி.
சற்று நேரத்திற்குள்...
குனிந்தத் தலை நிமிராமல்
வீட்டுப் பாடத்திற்குள்
மூழ்கி விட்டான்;
அவனின் ஆசிரியர்
அவனுக்குக் கொடுத்த
சாவியின் படி !
ஆம் !
யாரோ கொடுக்கும் சாவிக்கு
யாருக்காகவோ இயங்கிக்
கொண்டிருக்கிறோம்...
எந்திர மனிதனாய்,
பொம்மையாய் !
ஆற்றல்மிக்க இறைவா !
சாவி மனிதர்களை உமது
ஆவிக்குரிய மனிதர்களாய்
மாற்றும் !
எம்மை உமது கருவியாகப்
பயன்படுத்தும் !
எஸ். எஸ். ஜெயமோகன்
Subscribe to:
Posts (Atom)