Tuesday, March 9, 2010

நேர்மையின் நிழல்

வீட்டுக்காரர் வீட்டு வாடகையை
இரண்டு மடங்கு உயர்த்திவிட்டாராம் !
விரக்தியுடன் சொன்னார் என்னிடம்
பாசமிகு பத்திரிகை நண்பர்.

அவர் ஒரு நேர்மையானவர்,
நேசமானவர்.

யாரிடமும் கை-நீட்டதவர் - அதனால்
எல்லோரும் இவருக்கு கைக்கூப்புவர் !

சாதியம் எதிர்ப்பார்
சமத்துவம் பேசுவார்.

பொதுக்காரியத்திற்கு முதலில் வருவார்,
பொதுவுடைமை வேண்டும் என்பார் !

புத்தாக்கச் சிந்தனை உள்ளவர்,
புதுக் கவிதைகள் புனைபவர் !

எப்போதும் எளிமையாய் இருப்பார்,
இயற்கையே இறைவன் என்பார் !

உலகிற்கே பத்திரிகை வாயிலாக
தகவல்களைத் தருபவர் - இன்று
வீட்டுத் தரகரிடம் கெஞ்சலாய்
ஒரு தகவல் கேட்டார்,
" மிகக் குறைந்த வாடகையில்
உடனடியாக வீடு கிடைக்குமா ?
என்று !