Friday, July 15, 2011

இதயம்

சென்னை, முகப்பேரில் உள்ள எம். எம். எம். (MADRAS MEDIAL
MISSION) மருத்துவமனையில் எனது இளைய மகன்
கவின்- ஜார்ஜ்க்கு 13,06.2011 அன்று இதய அறுவை
நல்லபடியாக நடந்தது.

பிறக்கும்போதே, இதயத்தில் ஒரு சிறிய ஓட்டை (5 mm )
இருந்தது. இது தானாய் அடைபட்டு விடும் என்று ஐந்து
வருடம் காத்து இருந்தோம். முடிவில், அறுவை சிகிச்சைதான்
தீர்வு என்றார்கள்.

" இரக்கம் உள்ள இறைவன் ஏன் இதயத்தில் ஓட்டை போட்டார் "
என்று பல நாட்கள் நினைத்து இருக்கிறேன். இறைவனிடம்
வேண்டி இருக்கிறேன்.

மருத்துவமனியில் இருந்த நாட்கள் முள்மீது படுத்திருந்த
நாட்கள்தான். சோகமான மனிதர்கள், ஏக்கமான மனிதர்கள்,
ஏழ்மையான மனிதர்கள், இவர்களைச் சந்தித்தில் பெற்ற
அனுபவங்கள் மூன்று பட்டங்களுக்குச் சமம்,.

அங்குள்ள டாக்டர்கள், நர்சுகள், சிஸ்டர்கள் இவர்களின்
கனிவான சேவைகளை நேரில் பார்த்தேன். நேகிழ்ந்தேன்.

அங்கு அறிமுகமான முஸ்லிம் நண்பர் என்னிடம் சொன்னார்,
" அண்ணே ! இவர்கள் இறந்த உடன் நேரடியாக மோட்சத்துக்கு
போவார்கள் " என்றார்.

இவர்களின் கனிவான சேவைக்கு இந்த ஒரு வார்த்தை ஒரு
உதாரணம்.

கவினுக்கு ரத்தம் எடுத்து டெஸ்ட் செய்தாக வேண்டும்.

நரம்பில் ஊசி போடுகிறார்கள். சரியாக நரம்பு பிடிபடவில்லை.
அழுகிறான், துடிக்கிறான்.

" ஊசி குத்தினா வலிக்கும் ! உங்களுக்கு என்ன தெரியும் ?! "
என்றான் குழந்தை குழந்தைத்தனமாக.....

உடனே பக்கத்தில் இருந்த வார்டுபாய் நர்சிடம், " சிஸ்டர்
என்னுடைய ரத்தத்தை கொஞ்சம் எடுங்க" என்றான். ஊசியால்
குத்தி கொஞ்சம் ரத்தம் எடுத்தார்கள். அப்போது வார்டுபாய்
சொன்னான், " எனக்கு வலிக்கவே இல்லை. நீயும் கையை
நீட்டு, வலிக்காமல் ரத்தம் எடுக்கிறோம் " என்றான். அப்போது
அழாமல் கையை நீட்டினான்.

அந்த இளைஞனின் பரந்த மனதை எப்படி பாராட்டுவது என்றே
தெரியவில்லை.

அறுவை சிகிச்சை செய்த அன்று ரத்த தானம் செய்த நண்பர்களை
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். கலைஞர் காப்பீடு திட்டம்
எனக்கு கிடைக்க உடுனுக்குடன் உதவிய நண்பர்களையும்,
அழுவலர்களையும் எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
இவர்களுக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்

அருட்தந்தை பீட்டர் ஜெரால்ட், திரு பாண்டிச் செல்வம்,
திரு மதார், ஆரோக்ய நாதர் ஆலய நண்பர்கள்,
அலுவலக நண்பர்கள் மற்றும், உறவினர்கள்
இவர்கள் அனைவரும் எங்கள் மீது காட்டிய அன்பும்,
ஆதரவும் என்றும் மறக்க முடியாதவை.

அந்த மருத்துவமனையில் ஆண்டிற்கு சுமார் 200 ஏழை
( இருதயம் பாதிக்கப்பட்ட ) குழந்தைகளுக்கு முற்றிலும்
இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.
இதற்கு ஆகும் மொத்த செலவையும் மலையாள மனோரமா
பத்திரிகை ஏற்றுக் கொள்கிறது.

அங்கு சென்றபோதுதான் இதை அறிந்தேன். மலையாள
மனோரமாவின் மனித நேயத்திற்கு மரியாதையான
வணக்கங்கள் !

இப்போதெல்லாம் நான் அடிக்கடி இப்படி நினைப்பேன்...

"இறைவன் நம்மைச் சுற்றி இரக்கம் நிறைந்த சில
மனிதர்களை
நமக்காக படைத்து இருக்கிறார்? என்று. ! I