Sunday, October 26, 2014

சுவர்கள்

di="on">


சுவர்கள்


---------------



துயருறும் இழப்புகள்..



சுற்றத்தார் எல்லோருக்கும்

சொல்லி அனுப்ப

முடிவதில்லை !



சுவர்களே

தூதுவர்களாக மாறுகின்றன !



நகரத்து வீதிகளின் சுவர்கள்

கோடைக் காலங்களிலும்கூட

நனைகின்றன...

" கண்ணீர் அஞ்சலி" சுவரொட்டிகளைத்

தாங்கியபடி !



- எஸ். எஸ். ஜெயமோகன்