Wednesday, February 18, 2015

இயற்கை

சூரியன் உதிக்கும்போது
சத்தமிடுவதில்லை..

மலர்கள் மலரும்போது
விளம்பரம் செய்வதில்லை..

மழை என்றும் அனுமதிபெற்று
வருவதில்லை

தென்றல் திசை பார்த்து
வீசுவதில்லை

இயற்கை தனது கடமையை
இயல்பாய் செய்கிறது

இயல்பாய் இருப்பதும்,
உண்மையாய் இருப்பதும்
இயற்கையின் நெருக்கம் - அதுவே
இறைவனின் விருப்பம் !