Saturday, December 10, 2011

கிறிஸ்துமஸ் வரும் நேரம்

கிறிஸ்துமஸ் ஸ்டார்
------------------

அன்று பெதலகேமில்
உதிர்த்த நம்பிக்கை நட்சத்திரம்,
ஆண்டவர் பிறக்கப் போகிறார்
என்பதன் அருள் அடையலாம்.

நமக்காக ஒரு மெசியா பிறந்துள்ளார்
என்று மூன்று ராஜாக்களுக்கும் வழி காட்டிய
அந்த நட்சத்திரம், நம்
இல்லத்திலும் ஒளிவீசி
நமக்கு ஞானஒளி காட்டட்டும்.

கிறிஸ்துமஸ் மரம்
-----------------
பனி சூழ்ந்த இரவில், தன் வீட்டின்
மரத்தில் ஏரியும் மெழுகுவர்த்தியால்
அலங்கரித்து, கிறிஸ்துவின்
வருகை எவ்வளவு
பிரகாசமானது என்று
மார்டின் லூதர் தன் குடும்பத்திருக்கு
காட்டிய அருள் அடையாளம்தான்
கிறிஸ்துமஸ் மரம் என்பது வரலாறு.

மரம் என்பது உறுதிக்கும், வளர்ச்சிக்கும்,
பயனுக்குமான உதாரணம். இவைபோலவே
உறுதியாக நிலைத்திருப்போம்.
எல்லோருக்கும் பயனளிப்போம்.

கிறிஸ்துமஸ் தாத்தா
-------------------

குழந்தைகள் குதூகலத்துடன்
பார்த்து மகிழ்வது
கிறிஸ்து தாத்தாவைதான்.

கிறிஸ்துமஸ் இரவில் மாயமாய் வந்து
எல்லோருக்கும் பரிசுகளை அள்ளித்
தருபவர். எல்லோருக்கும் பிரியமானவர்.

நாம் பரிசு பெறுபவர்களாக
மட்டுமின்றி, பிறருக்கு பரிசுகளை
கொடுத்தும் மகிழ்வோம்.

++++

( 'அருள் நாதம்' இதழுக்காக நான் எழுதியது )

Thursday, December 8, 2011

இதழாள்

இன்று, புதிதாய்
வாங்கி வந்த
வார இதழை
புரட்டிப் பார்க்கும்போது.....

முழுசாய் படித்து முடிக்காத
சென்றவார இதழ்
மௌனமாய்
முனங்குகிறாள் !