Thursday, November 24, 2011

ஜனநாயக சிலுவை

அன்று,

பிலாத்து மன்னன்
தவறாக தீர்ப்பிட்டான்,
சிலுவை சுமந்தார் இயேசு !


இன்று,

ஆட்சியாளர்கள்
தவறாக திட்டமிடுகிறார்கள்,
விலைவாசி சிலுவையை
தினமும் சுமக்கிறோம் !

Sunday, November 13, 2011

ஆத்ம தாகம்

எண்ணங்களையும், கதைகளையும் வார்த்தைகளால்
கோர்த்து அதை அச்சு வடிவில் பார்ப்பது என்பது
ஒரு வகை இன்பம்.

அதையே, கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து, பின்னர்
படமாக திரையில் பார்க்கும்போது கிடைப்பது பேரின்பம்.

அந்த இனிய அனுபவம் எனக்குக் கிடைத்தது.

"ஆத்ம தாகம்"- குறும்படத்தின் கதைச் சுருக்கம் இதுதான்.


கல்லறைத் திருநாள். கல்லறைத் தோட்டம், அதில்,
சூசை, தாமஸ் ஆகிய இரண்டு கல்லறைகள்.

தாமசின் கல்லறைகள் மாலையிட்டு, மலர்தூவி,
மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு இருக்கிறது. சூசையின்
கல்லறை கட்டான் தரையாக இருக்கிறது.
யாரும் வரவில்லை. பராமரிக்கப் படவில்லை.

இரண்டு ஆத்மாக்கள் ஆத்மார்த்தமாக பேசிக்
கொள்கிறார்கள். அழுகை, புலம்பல், ஏக்கம்
அத்தனையையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பாதிரியார் ஜெபம் செய்து, கல்லறை மந்திரிப்பு
செய்கிறார்.தீர்த்தம் தெளிக்கிறார். சூசை, தாமஸ்
கல்லறைகள் மீதும் விழுகிறது. ஆத்மாக்கள்
குளிர்விக்கபடுகிறது.

பதினைந்து நிமிட குறும்படம். நினைத்ததைவிட
அற்புதமாக வந்திருந்தது.

சாந்தோம் தேவாலயத்தில் நவம்பர் இரண்டாம் தேதி
ஆத்மாக்கள் நினைவு நாள் அன்று, பேராயர் சின்னப்பா
அவர்கள் வெளிட்டார். அன்று எல்லோருக்கும் படம்
காட்டப்பட்டது.

பார்த்தவர்கள் எல்லோரும் பாராட்டினார்கள்.
நண்பர்கள் வாழ்த்துக் கூறினார்கள்.
கத்தோலிக்கத் திருச்சபையின் மதிப்பீடுகளை
அழகாகச் சொல்லி உள்ளீர்கள் என்றார்கள்.

படத்தில், சூசை, தாமஸ் ஆகிய இருவரின் ஆத்மாக்களின்
தாகம் தணிந்தது.

நிஜத்தில், இந்தக் குறும் படத்தை உருவாக்கிய எங்களது
ஆன்ம தாகமும் தணிந்தது.

என்மீது நம்பிக்கை கொண்டு, இந்தப் படத்தை தயாரித்த
பாசமிகு அருட்தந்தை பீட்டர் ஜெரால்ட் அவர்களுக்கு
எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.