எஸ். எஸ் ஜெயமோகன்
Friday, May 10, 2013
வலி
விரும்பியவர்களை
நெருங்கும்போது
விலகிச் செல்கிறார்கள்..
அந்த வலியை, இப்போது
உணர முடிகிறது !
சில நேரங்களில்,
நாமும் விலகி நின்றோம்தானே !
நம்மை நேசிபவர்கள்
நம்மை நெருங்கும்போது !
Saturday, April 20, 2013
கொஞ்சம்....
கொஞ்சமாகவே படித்தேன்
குறைவான மதிப்பெண்
பெற்றேன் !
கொஞ்சமாகவே உழைத்தேன்
குறைவான ஊதியம்
பெற்றேன் !
கொஞ்சமாக ஜெபித்தேன்
கொஞ்சமாகவே ஜெயித்தேன் !
கொஞ்சம் என்பது ஒரு
பெருங்குறை....
முழு இதயத்தோடு
முழு ஆற்றலோடு
முழு நம்பிக்கையோடு
முழுவதுமாக
செயலில் கரைந்து,
காணமல் போவதில்தான்
முழு வெற்றி உள்ளது என்பதை
இப்போது முழுமையாக
உணர்கிறேன் !
Saturday, January 12, 2013
ஆனந்தம்
அன்பான கைக்குலுக்கல்
இன்று
அழுத்தமானது !
அளவோடு சிரிக்கும் புன்சிரிப்பு
இன்று
அழகானது !
வாய் பேசாதவர்கள்கூட
இன்று
வாழ்த்துகிறார்கள் !
புத்தாண்டு - பொங்கலுக்கு
நன்றிகள் !
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)