சூரியன் உதிக்கும்போது
சத்தமிடுவதில்லை..
மலர்கள் மலரும்போது
விளம்பரம் செய்வதில்லை..
மழை என்றும் அனுமதிபெற்று
வருவதில்லை
தென்றல் திசை பார்த்து
வீசுவதில்லை
இயற்கை தனது கடமையை
இயல்பாய் செய்கிறது
இயல்பாய் இருப்பதும்,
உண்மையாய் இருப்பதும்
இயற்கையின் நெருக்கம் - அதுவே
இறைவனின் விருப்பம் !