Sunday, May 1, 2011

வியர்வையின் வாசம்

சென்னை- மெரினா கடற்கரையில் உள்ள சிலைகளில்
மிகவும் மதிப்பு வாய்ந்தது உழைப்பாளர் சிலை.

எப்போது போனாலும் அந்தச் சிலையை சில நிமிடங்கள்
உற்றுப் பார்ப்பேன். நரம்புகள் புடைக்க வேலை செய்யும்
உடல் உழைப்பாளர்களின் உடல்கள் ஆயிரம் அர்த்தங்களைச்
சொல்லும்.

திட்டமிட்டு உழைப்பவர்கள் முன்னேறிச் சென்று கொண்டே
இருக்கிறார்கள். பசிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்கள்
ஓடிய இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

"ஒரு சான் உயிரை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம். " கவிஞர் வாலி அவர்களின்
பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது,

எழுபது வயது நிரம்பிய முதியவர்கள்கூட கடுமையாக
உழைப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் மிகவும் சொற்ப
வருமானத்திற்காக போராடுகிறார்கள்,.
உழைப்பு மட்டுமே அவர்களுக்கு கை கொடுக்கிறது.

கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதில்
ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.
உயர்வையும், வளர்ச்சியையும் இயற்கையிடம் ஒப்படைத்து விட்டு
உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டு, சிலை வடிவில் உழைக்கும்
உழைப்பாளர்கள் நமக்கெல்லாம் நம்பிக்கை தந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்.

ஆம், மயக்கும் மல்லிகையைவிட உழைப்பளர்களின் வியர்வைக்கு
வாசனை அதிகம்.

=====