Thursday, June 28, 2012

மா. பொ. சி




தமிழர்களின் அடையாளம் வீரம்.
வீரத்தின் அடையாளம் மீசை.

 மா. பொ. சி என்றதும்
நினைவுக்கு வருவது
அவரது பெரிய மீசை !

தமிழ்மீதும், தமிழ் மண்ணின்மீதும்
அவருக்கு இருந்தது
தீராத ஆசை !

 நாட்டு விடுதலைக்காகப்
போராடி சிறை சென்றவர்,
சித்தரவதைகளை
அனுபவித்தவர்.

அங்கே, தமிழ் இலக்கியங்களையும் காவியங்களைக் கற்றார். '

சிலப்பதிகாரம்' அவருக்குச்
சிநேகதியானாள்,

' சிலம்புச் செல்வர்' என்று
தமிழ் மக்களால் அன்பாக
அழைக்கப் பெற்றார் !