தி. நகர் ( ஆர். எம். கே. வி ) துணிக்கடை அருகில்
காவல் துறையின் அறிவிப்பு பலகை ஒன்று இருந்தது.
அதில், "பிக்பாக்கெட் திருடர்கள் ஜாக்கிரதை"
என்று சிலரின் படத்தைப் போட்டிருந்தார்கள்.
அதில் நான்கு- ஐந்து பெண்களும் அடங்குவர்.
ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகன்,
" அப்பா ... பொம்பளைங்ககூட திருடுவாங்களா ? ! "
என்று என்னிடம் வியப்பாகக் கேட்டான்.
அவனக்குப் புரிய வைப்பதற்கு மிகவும்
சிரமப் பட்டேன்.
இன்னொரு அனுபவம்....
தொலை தூர கல்வி வாயிலாக எம்.பி. ஏ.,
படிக்கும் நான், சமிபத்தில், திருவான்மியூரில்
உள்ள நெல்லை நாடார் பள்ளீயில் கடைசி
செமஸ்டர் தேர்வு எழுதினேன்.
முன் இருக்கையியல் முப்பது வயது மதிக்கத் தக்க
ஒரு பெண்மணி துண்டு சீட்டில் எழுதி, சுருட்டி
பீடி போல் நிறைய " பிட்" பேப்பர் வைத்திருந்தாள்.
தேர்வு தொடங்கியதும் கொஞ்சமும் கூச்சம்,
பயம் இல்லாமல் ஒவ்வொன்றாக எடுத்து
காப்பி அடித்து எழுதினாள்.
இதைப் பார்த்த எனக்கு ஆச்சரியமும், வேதனையும்,
கொஞ்சம் கோபமும் வந்தது.
அப்படிக் காப்பி அடித்து வெற்றிப்பெற வேண்டுமா ?
என்பதுதான் எனக்குள் எழுந்த கேள்வி !
இந்தச் சம்பவத்தை அலுவலகத்தில் நண்பர்கள்
சிலருடன் பகிர்ந்து கொண்டேன். அப்போது, ஒருவர்
" பொம்பளைங்ககூட காப்பி அடிப்பாங்களா... " என்று
வியப்புடன் கேட்டார்.
தி. நகரில் என் மகன் கேட்ட அதே கேள்விதான்
நினைவுக்கு வந்தது.
ஆண்கள் பார்வையில், பெண்கள் தவறு செய்யாதவர்களாவே
கருதப்படுகிறார்கள். எதிர்ப்பார்க்கிறார்கள்.
பெண்கள் மேன்மையானவர்களே !