Saturday, August 13, 2011

பரிசு

பரிசு



" இன்றைய மாணவர்களின் மனதில் மேலோங்கி இருப்பது
சாதனை எண்ணங்களா ? அல்லது பொழுது போக்கு
எண்ணங்களா ? " என்ற தலைப்பில் நடைபெற்ற
பட்டிமன்றத்தின் தீர்ப்பு எல்லோரும் எதிர்ப்பார்த்தபடியே
சாதனை பக்கமே இருந்தாலும்கூட, பொழுதுபோக்கின்
அவசியத்தை நடுவர் எடுத்துக் கூறிய விதம் நன்றாக
இருந்தது.

தூய மரியன்னை ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்
பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன்
ஆண்டோ ஜெனித் " சாதனை எண்ணங்களே "
என்ற குழுவில் பேசினான்.

சிறந்த பேச்சாளர் என்ற பரிசும், பதக்கமும் பெற்றான்.

ஆயிரம் பேர் நிறைந்த கூட்டத்தில் பலத்த கைத்தட்டலுக்கு
மத்தியில் அவன் பரிசை பெற்றபோது, நானும் என் மனைவியும்
மகிழ்ச்சியில் நனைந்தோம்.

அவனுக்காக நான் சிறிது நேரமே ஒதுக்கி எழுதிக்
கொடுத்தேன். அப்படியே உள்வாங்கி, அழகாக
வெளிப்படுத்தினான்.

பிள்ளைகளை திறமையாளர்களாக உருவாக்குவதில்
பெற்றோர்களின் பங்குதான் அதிகம் என்பதை
மனபூர்வமாக உணர்கிறேன்.

இனி, பிள்ளைகளுக்காக அதிக நேரம் ஒதுக்க
முடிவு செய்து உள்ளேன்

மகன் வாங்கிய பரிசில் மாற்றம் அடைந்தது
மனசு !