Thursday, March 1, 2012

அழகு

கனவுகள்

தூக்கத்தை கலைக்காதவரை
அழகு !


உறவுகள்

உதவி கேட்டகாதவரை
அழகு !


மனம்

சுருங்காதவரை
அழகு !



மலர்

உதிராதவரை
அழகு !



விண்மீன்

வானில் இருக்கும்வரை
அழகு !



வசீகரிக்கும் எழுத்தாளர்கள்

நேரில் பார்க்காதவரை
அழகு !

1 comment:

  1. nice line sir, now i am telling one line -

    Kadhal Kasakkatha vari
    Azhaku....

    ReplyDelete