Sunday, May 6, 2012

கலையா.. அறிவியலா ..

வணிகம் புரிவதும், தொழில் செய்வதும், நிர்வாகம் நடத்துவதும் அறிவியல் சார்ந்தது மட்டும்தானா ? இல்லை ! இவைகள் ஒரு கலைத்தன்மை வாய்ந்தவைகள் என்றும் மேலாண்மை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

ஒரு நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகளைப் பார்ப்பதும், ஊழியர்களைப் பட்டியல்செய்து மாத ஊதியம் வழங்குவதும் கணிதமும், கணிதவியல் சார்ந்தது ஆகும். அதே நேரத்தில், ஒரு நிறுவனத்தை அடையாளப்படுத்தும் ஒரு சின்னத்தை ( லோகோ) உருவாக்குவது என்பது முழுக்க, முழுக்க கலை வடிவம் ஆகும்.

 பன்னாட்டு தொழில் முனைவோர் திரு ஆண்டி வூர்கோல் அவர்களின் முக்கியமான ஒரு மேற்கோள்... " பணம் ஈட்டுவது ஒரு கலை, வேலை செய்வதும் ஒரு கலை, வணிகம் புரிவது மிகச் சிறந்த ஒரு கலை " என்கிறார்.

 சந்தையில் அவ்வப்போது நிகழும் மாறுதல்கள், எந்த அளவிற்கு தாக்குதல்களை ஏற்படுத்தும் என்பதைப் பகுத்து ஆய்வதில் அறிவியல் அடங்கியுள்ளது. - சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் இவை அனைத்துமே மனித நடத்தைகள் பற்றிய நுணுக்கமான உணர்வுகளைக் கொண்டது. - மனதிற்குப் புரிதல் உணர்வையும், கண்களுக்கு அழகுணர்ச்சியையும் உருவாக்கச் செய்ய வேண்டிய வழிமுறைகளில் கலைகள் மேலோங்கி நிற்கிறது.

 வெற்றிப் பெற்ற விற்பனையாளர்கள் பொதுவாகச் சொல்லும் ஒரு வாக்கியம் " தொழில் ரீதியான அணுகுமுறை; தனிப்பட்ட முறையில் கவனத்தைக் கவர்தல் " ( Professional Approach and Personal Touch ) என்பதாகும்.

பன்னாட்டு மனிதவள மேம்பாட்டு வல்லுனரும், தொழில் ஆலோசகருமான திரு. டீன் ஸ்டான்லி கூறும்போது... " தொழில், வணிக மேலாண்மையில் ஐம்பது விழுக்காடு கலையும், ஐம்பது விழுக்காடு அறிவியலும் உள்ளது " என்கிறார்.

+++ ( வளர் தொழில் இதழுக்கு நான் எழுதிய கட்டுரையின் சுருக்கம் - ஏப்ரல் 2012 )

No comments:

Post a Comment