Monday, February 20, 2012

கொலை வெறிப் பாடல்

" நமது கண்ணுக்குத் தெரியாமல் உலகின்
பல்வேறு மொழிகள் அழிந்து வருகிறது.
அதில் தமிழ் மொழியும் ஒன்று.
இன்னும் இருநூறு ஆண்டுகளில் தமிழ்
பேசுவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடும்.
தமிழில் எழுதுபவர்களைப் பார்ப்பதே அரிதாக
இருக்கும் " என்கிறது மொழியியல் ஆராய்ச்சி
ஆய்வுகள்.


உலகின் பழமையான மொழி நமது தமிழ்மொழி.
அது அழிந்து விடுமா ? என்ற அச்சமும்,
சந்தேகமும் எழுந்தது.
அப்படி நடந்து விடக் கூடாது என்பதுதான்
என் எண்ணம்.


தாய் மொழிப் பற்றும், தனது மொழியைக்
காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமும்
இல்லாத ஒரு தேசத்தில், எந்த மொழியும்
தானாகவே அழிந்து விடும்.
இந்த இக்கட்டு இப்போது நமது தமிழ்
மொழிக்கு ஏற்பட்டு உள்ளது.


நடிகர் தனுஷ் நடித்து, பாடி இருக்கும்
" ஒய் திஸ் கொலை வெறி " பாடல்
உலகம் முழுவதும் பரவி இருப்பதாகச்
சொல்கிறார்கள். அதாவது தமிழை
களங்கப்படுத்தி, கொலை செய்து உலகம்
முழுவதும் பரப்பி இருக்கிறார்கள்.
அந்தப் பாடலில் ஆங்கிலத்தை மிகவும்
அசிங்கமாகக் கலந்து, தமிழை உச்சக்கட்ட
அளவிற்கு கொலை செய்திருக்கிறார்கள்.


இந்தப் பாடலை வெட்கமே இல்லமால்
ஒவ்வொரு தமிழனும் ரசித்துக் கேட்கிறார்கள்

செல்போனில் ரிங் டோன் வைத்து கேட்கிறார்கள்.

நடிகர் தனுஷின் பிரபலத்தையும்,
புலமையையும் கேள்விப்பட்டு
நமது பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்
விருந்து கொடுத்து, பாராட்டி இருக்கிறார்.
அப்படி என்ன ? சாதனை புரிந்துள்ளார்
என்று புரியவில்லை.


இந்த "கொலை வெறி பாடல் "
மிகப் பிரபலம் ஆனதற்காக திருப்பதிக்குப்
போய் மொட்டை அடித்து இருக்கிறார்
தனுஷ்.

பத்திரிகையாளர்களைச் சந்தித்து
" வரும் காலத்தில் இந்த மாதிரியான
நிறையப் பாடல்களைப் பாடப்போகிறேன் "
என்று வேறு சொல்லி இருக்கிறார்.


இவர் செய்யப் போகும் கலைச்சேவையை
நினைத்தால் உள்ளம் கலங்குகிறது.
தனிப்பட்ட முறையில் நடிகர் தனுஷின்மீது
எந்தவேத வெறுப்பும், கோபமும் யாருக்கும்
கிடையாது.


சினிமா மிகவும் சக்தி வாய்ந்த ஒரு ஊடகம்.
அதில், சமூக அக்கறை இல்லாமல் நடந்து
கொள்வதால்தான் உள்ளம் வேதனைப்
படுகிறது.


மூத்த கவிஞர்களான வாலி, வைரமுத்து
போன்றோர்கள் இந்த கொலை வெறி
பாடலைக் குறித்து பேசியதாகத் தகவல்
இல்லை. கவலைப் பட்டதாகத்
தெரியவில்லை.


ஒருவேளை, நடிகர் தனுஷ் , சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்தின் மருமகன் என்பதால்கூட
இருக்கலாம் !


இந்த " கொலை வெறிப் பாடலை ஒட்டு மொத்த
தமிழகமும் புறக்கணிக்க வேண்டும்.
வலுவான எதிப்பினைத் தெரிவிக்க வேண்டும்.
அப்போதுதான், வருங்காலத்திலாவது
இம்மாதிரியான அருவருப்புப் பாடல்கள்
வருவதைத் தடுக்க முடியும்.


அந்தக் காலத்தில் அறநெறியுடன்,
தமிழை வளர்த்து இருக்கிறார்கள்.
இந்தக் காலத்தில், கொலை வெறியுடன்
தமிழை கொலை செய்து கொண்டு
இருக்கிறார்கள்.


"கொலை வெறியை" ஒரு சாதரணமான
ஒரு சொல்லாக்கி இருக்கிறார்கள்.
மக்களிடம் மறைமுகமாக, கொலை
வெறியைத் தூண்டி வருகிறார்கள்.

2 comments:

  1. unmai thaan nanbare.. ippothe thamizhile pesuvathai vida pira mozhiyil pesuvathai aanandhamaaga eduthukolgirargal... mozhi unarvu vendum... antha unarvu raththathil ooda vendum. appothu thaan avargalukku puriyavarum nam mozhiyin arumai perumai.....nandri nanbar jeyamohan...

    ReplyDelete
  2. நண்பர் கபிலன் அவர்களுக்கு,

    எனது கட்டுரையைப் படித்து, உங்கள் கருத்துக்களை
    பகிர்ந்துகொண்டமைக்கு என் நன்றிகள்.

    ReplyDelete