Tuesday, May 4, 2010

கடவுள்

நான் வணங்க ஒரு கடவுள்
வேண்டும் !

தினம் மனம் இதம் பெற
எனக்கொரு மதம்
வேண்டும் !

நாட்டில் சட்டம் ஒழுங்கு
சீராக இருப்பதற்கு
காவல் துறையா காரணம் ?
மக்களின் கடவுள் நம்பிக்கைதான்
காரணம் !

தடியடி, துப்பாக்கி, பீரங்கி
இவற்றால் உடலை
அச்சுறுத்தலாம்,
உருவத்தைச் சிதைக்கலாம் !
உள்ளத்தை உருக வைப்பதும்,
திருத்துவதும் ஆன்மிகமே !

நான், என் குடும்பம், என் பிள்ளைகள்
நன்றாக இருக்க வேண்டும்..
இறந்த பின்பு முக்தியும் பெற
வேண்டும் என்று எண்ணுவது
மூட நம்பிக்கையா ?
இருந்து விட்டு போகட்டும் !

நேர் பாதையில் நடப்பதற்கும்,
பிறர்க்குத் தீங்கு செய்யாமல்
இருப்பதற்கும் ஒரு வகையில்
ஆன்மிகம் நல்லது தானே ?

கடவுளே நேரில் வந்து பகுத்தறிவு
வாதம் செய்தாலும்
எனக்கு ஒரு கடவுள் வேண்டும்

No comments:

Post a Comment